எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் மீது பாஜகவினர் புகார்!

Udhayanidhi Stalin DMK BJP Madurai
By Sumathi Jun 27, 2022 04:14 PM GMT
Report

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நடப்பட்டிருந்த செங்கலை திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக  பாஜகவினர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் 

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான பத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர்

எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் மீது பாஜகவினர் புகார்! | The Bjp Has Complained That Udayanidhi Stalin

திமுகவின் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை சேப்பாக்கம் தொகுதி

பிரச்சாரம்

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்திய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல

எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் மீது பாஜகவினர் புகார்! | The Bjp Has Complained That Udayanidhi Stalin

திருமண விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் திருமண பரிசாக அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் அவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த

 செங்கல் திருட்டு

செங்கலை திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது என்றும் இதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

உதயநிதி செய்த இந்த செயல் மத்திய அரசின் திட்டத்தை இழிவு படுத்துவது போல் அமைந்துள்ளது என்றும் மேலும் அரசு கட்டடம் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த செங்கலை திருடுவது சட்டப்படி குற்றம் என்பதால்

அவர் கைது செய்து விசாரணை செய்ய வலியுறுத்தி உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குட்டி மோடியாக மாற நினைக்கிறார் - அண்ணாமலை பேச்சு..!