டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களுடன் தோனி.. வைரலாகும் புகைப்படங்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.
டி20 போட்டி
இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இரண்டாவது டி20 போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி எட்ஜ்பாஸ்டனில் உள்ள இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்றார்.
அங்கு இந்திய வீரர்களுடன் உரையாடினார். இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு தோனி சென்ற புகைப்படங்களை பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.
டிரஸ்ஸிங் ரூமுக்கு தோனி
தற்போது இந்த படங்கள் வைரலாகி வருகிறது. " Always all ears when the great msdhoni talks!" என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தது.
இந்த வார தொடக்கத்தில், தோனி ரஃபேல் நடால் மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் இடையேயான காலிறுதிப் போட்டியைக் காண விம்பிள்டனுக்குச் சென்றிருந்தார்.
இந்திய அணி
மேலும் இங்கிலாந்தில் தோனி தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் வைரலானது.இரண்டாவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பந்த் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
49 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடிய இந்திய அணி அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்ததன் காரணமாக, 20 ஓவர்களில் 170/8 ரன்களை எடுத்தது.
கேப்டன் ரோஹித் சர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 31 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ரிச்சர்ட் க்ளீசன், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணியை 121 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்திய அணி.
கள்ளக்காதலியுடன் பயணம்... மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர்!