சென்னையை இன்னொரு வீடாக நான் நினைக்கிறேன் : எம்.எஸ்.தோனி
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டு 25வது ஆண்டு தின கொண்டாட்டம் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஸ் ஆடிடோரியத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.தோனி, “சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன் எனக் கூறினார்.
மேலும், ஐபிஎல், ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளுக்கு வீரர்கள் வளர்ந்து வர வேண்டும். இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்காக விளையாடும்போது, மிகவும் பெருமையாக இருக்கும்.
மாவட்ட கிரிக்கெட் என்பது அனைவருக்கும் முக்கியமானது. இந்த நேரத்தில் ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.