கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டும் - வைத்திலிங்கம் பேட்டி..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 06, 2022 06:25 PM GMT
Report

கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம் பேட்டி 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிப்போம். பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம்.

கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டும் - வைத்திலிங்கம் பேட்டி..! | Kodanad Criminals Should Be Brought Outside World

உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியுள்ளது. கோடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளியை தமிழக அரசு கண்டுபிடித்து,நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று பல பேர் கோரிக்கை வைக்கின்றனர்.

எங்களை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நடந்த சம்பவத்தின், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம்" என்று அவர் கூறினார்.  

இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் ட்வீட்..!