விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படியாக நயன்தாரா ரொம்ப காதலிப்பது எது தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Thailand Marriage
By Thahir Jun 22, 2022 12:07 AM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படியாக மற்றொரு பொருளை ரொம்ப காதலிப்பதாக கூறப்படுகிறது.

யார் இந்த நயன்தாரா?

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் நயன்தாரா இவர் இயற்பெயர் டயானா மரியா குரியன்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படியாக நயன்தாரா ரொம்ப காதலிப்பது எது தெரியுமா? | Do You Know What Nayantara Loves So Much

அதை தொடர்ந்து சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

விருதுகள்

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றார்.

2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றார். மேலும் கலைமாமணி விருது ,நந்தி விருது ஆகியவைகளை தன் நடிப்புகள் மூலம் மேற்கண்ட விருதுகளை வென்றார்.

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

பிரமாண்ட திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படியாக நயன்தாரா ரொம்ப காதலிப்பது எது தெரியுமா? | Do You Know What Nayantara Loves So Much

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

புகைப்படம் வைரல்

திருமணம் காலை நடந்த நிலையில்  தனது சமூக வளைத்தல பக்கத்தில் விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் அதை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

மிகவும் பிடித்த கலர்?

நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னும் அதற்கு முன்பும் அவர் மஞ்சள் நிற ஆடைகளில் உடுத்துவதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவனுடன் திருப்பதிக்கு சாமி தரிசனத்துக்கு சென்ற நயன்தாரா மங்களகரமான மஞ்சள் நிற சேலையில் சென்றார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்திக்க வந்த பொழுது கூட அவர் மஞ்சள் நிற சேலையில் வந்தார். விக்னேஷ் சிவனின் கைகளை பற்றி பிடித்துக்கொண்டு வந்த அவர் அன்றைய நாளின் வைரலாக மாறினார்.

இந்நிலையில் தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளனர்.இது குறித்து நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்திலும் அவர் மஞ்சள் நிற ஆடையில் தான் உள்ளார்.எனவே இந்த மஞ்சள் நிறம் அவருக்கும் மிகவும் பிடித்த கலர் என்று கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனுக்கு அடுத்த படியாக நயன்தாரா ரொம்ப காதலிப்பது எது தெரியுமா? | Do You Know What Nayantara Loves So Much

திருமணத்திற்கு பிறகு அவர் மஞ்சள் கலர் ஆடைகளை அதிகம் பயன்படுத்துவதால் இந்த கலர் விக்னேஷ் சிவனுக்கும் பிடித்த கலராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..!