நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு : தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் , மிரட்டும் அல்கொய்தா

By Irumporai Jun 08, 2022 09:39 AM GMT
Report

இஸ்லாமிய இறை தூதர் நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. 

நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு:

டந்த சில மாதங்களாக ஞானவாபி மத வழிபாட்டுத் தளத்தில் சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த விவகாரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி சேனல் கடந்த 27 - ம் தேதி ஒரு விவாதம் நடத்தியது .

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு : தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் , மிரட்டும் அல்கொய்தா | Al Qaeda Suicide Bombings In Mumbai Delhi Gujarat

அந்த விவாதத்தில் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைதுதரான நபிகள் குறித்து இழிவாக பேசினார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்தது பாஜக.

அரபு நாடுகள் எதிர்ப்பு :

இறை தூதர் குறித்து சர்ச்சை பேச்சிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன , கத்தார், சவுதி ஆகிய நாடுகள் இந்தியப் பொருட்களையும் இந்திய பணியார்களையும் புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியானது.இதனால் இந்தியாவில் ஆளும் அரசான பாஜக கடும் நெருக்கடிக்கு உள்ளானது, இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை இந்த விவாகரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தும் இன்னும் இந்த விவகாரம் ஒயவில்லை.

 மிரட்டும் அல்கொய்தா :

இந்த நிலையில் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு : தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் , மிரட்டும் அல்கொய்தா | Al Qaeda Suicide Bombings In Mumbai Delhi Gujarat

இது தொடபாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என கூறியுள்ளது.

காவிகளுக்கு எச்சரிக்கை:

தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு : தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் , மிரட்டும் அல்கொய்தா | Al Qaeda Suicide Bombings In Mumbai Delhi Gujarat

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த சர்ச்சைக்கு வித்திட்ட நுபுர் ஷர்மாவுக்குப் பாலியல்ரீதியான மிரட்டலும், கொலை மிரட்டலும் வந்துகொண்டிருக்கின்றன.

இதனால் அவருக்கு டெல்லி அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. அல்கொய்தாவின் மிரட்டல் கடிதம் சமூக வலைதளத்தில் பரவியிருக்கிறது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குறிப்பிட்ட நகரங்களில் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய விவகாரம் : வேலைஇழக்கும் நிலையில் 30 லட்சம் இந்தியர்கள் ?