நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு - நுபுர் சர்மா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு..!
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்ப வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்சை கருத்து
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைதுாதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
இது சர்வதேச அளவில் எதிர்ப்பை கிளப்பியது.குவைத்,ஈரான்,கத்தார்,சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்ச்சை கருத்தை தெரிவித்த நுபுர் சர்மா அக்கட்சியில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வழக்குப்பதிவு
இதனிடையே மும்பை உள்ளிட்ட பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கூறும் போது,
பைதோனி போலீஸ் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டத்தின்படி வாக்குமூலத்தை பதிவு செய்ய விசாரணைக்காக அவரை அழைப்போம்.
சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். என்று கூறினார். இந்த நிலையில் நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.