கல்யாணம் சின்ன சாப்டர்..அதவிட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு... காணாமல் சென்ற நடிகை தகவல்!
சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனதன் காரணம் குறித்து நடிகை சுகன்யா கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
மணமுறிவு
இவர் மொத்தம் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.கடந்த 2002 ஆகும் ஆண்டு நடிகை சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார்.
பாரத சுகன்யா பள்ளி
சுகன்யா ஒரு பரத நாட்டிய கலைஞரும் கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சுகன்யா லண்டன் சென்று அங்கு பாரத சுகன்யா பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுகன்யாவின் காணொளி வைரலாகி வருகின்றது, அதில் அவர் திடீரென்று ஏன் சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்பதற்கான காரணம் குறித்து பேசி இருந்தார்.
தேசிய விருது
அப்போது அதில் எனக்கு கானாகீனா என்கிற மலையாள திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்து. ஆனால் இந்த விருது பற்றி யாரும் பேசவும் இல்லை, அதன் பின் என்னை யாரும் நடிக்கவும் அழைக்கவில்லை.
அப்போது இருந்த நிலையில் எனக்கு பரதம் தான் காப்பாற்றியது என்று கூறினார்.அதே பேட்டியில அவர் ஏன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்கப்பட்டது.
கல்யாணம் சின்ன சாப்டர்
அதற்கு பதில் அளித்த அவர், வாழ்க்கையில் கல்யாணத்தை விட செய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது, கல்யாணத்தை என்பது ஒரு சின்ன சாப்டர். அதை விட உருப்படியான நிறைய விஷயங்களை நான் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
தற்போது இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
’கிம்’ போல மாறனும்.. 4 கோடி செலவு பண்ணி 40 தடவ ஆபரேஷன் - வசமாக மாட்டிய பெண்!