36 மணி நேரத்தில் 15 படுகொலைகள், மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது - இபிஎஸ்

M K Stalin Government of Tamil Nadu AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Aug 24, 2022 11:24 AM GMT
Report

தமிழகத்தில் 36 மணி நேர்த்தில் 15 படுகொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சருக்கு விளம்பர மோகம் - இபிஎஸ் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த விடியா திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால் குற்றங்களை தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த முதலமைச்சர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால் இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள், மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது  - இபிஎஸ் | 15 Massacres In 36 Hours Tamil Nadu Eps

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது. கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன.

இது மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாரதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற புகார் கொடுத்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் - இபிஎஸ் 

* வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற சென்னையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் அபிஷேக் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

* திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தங்கராஜ் மற்றும் உதயகுமார் என்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தங்கராஜை உதயகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.இதை பார்த்த பொதுமக்கள் உதயகுமாரை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

* கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் என்பவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

* விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் மரிய பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

* நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஃபைனான்சியர் மனோகரன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

* மதுரை SS காலனி மேலத் தெருவைச் சேர்ந்த ஐயனார் என்ற மயான காவலாளி சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

* வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே வணிக வளாகத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபனி சரணியா என்பவர் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவத்தில் உயிருக்கு போராடி வருகிறார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், தனி அருகே கட்டடத் தொழிலாளி சின்னப்பா என்பவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இருவரும், கள்ளக்குறிச்சியில் ஒருவரும் என்று மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, கீழ்க்கண்ட கொலைச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

* மயிலாடுதுறையில் கண்ணன் என்பவர் வெட்டிக் கொலை

* பெரம்பலுாரில் சுரேஷ் என்பவர் வெட்டிக் கொலை

* வேதாரண்யத்தில் ரத்தினசபாபதி என்பவர் அடித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலியில் ராஜா என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

* சிவகாசியில் சரவணகுமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

* கிருஷ்ணகிரியில் முருகேசன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆக, கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

சட்டம் ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இது தான் அவர் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

இந்த படுகொலைச் சம்பவங்களுக்கு காவல்துறையே கையில் வைத்திருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.