காதல் ஜோடி செய்த காரியம் - வாலிபரின் தாயை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

Karnataka India Crime
By Jiyath May 04, 2024 05:48 AM GMT
Report

காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியதால், வாலிபரின் தாயை பெண்ணின் குடும்பத்தினர் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கொடூர செயல் 

கர்நாடக மாநிலம் ராணிபென்னூர் தாலுகா அரேமல்லாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமவ்வா (50). இவரது மகன் மஞ்சுநாத் என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளார்.

காதல் ஜோடி செய்த காரியம் - வாலிபரின் தாயை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்! | Woman Tied To Pole Thrashed Son Elopes With Girl

இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் தந்தை சந்திரப்பாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தனது உறவினர்களுடன் அனுமவ்வாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

பின்னர் அனுமவ்வாவை கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து சந்திரப்பா உள்பட 3 பேர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அனுமவ்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விடாமல் தந்தை செய்த காரியம் - ஆத்திரத்தில் மகள் வெறிச்செயல் - அதிர்ச்சி சம்பவம்!

விடாமல் தந்தை செய்த காரியம் - ஆத்திரத்தில் மகள் வெறிச்செயல் - அதிர்ச்சி சம்பவம்!

3 பேர் கைது 

இதனிடையே அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமவ்வாவின் குடும்பத்தினர் ராணிபென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காதல் ஜோடி செய்த காரியம் - வாலிபரின் தாயை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்! | Woman Tied To Pole Thrashed Son Elopes With Girl

அதுபோல் சந்திரப்பாவும் தனது மகளை மஞ்சுநாத் கடத்தி சென்று விட்டதாக மற்றொரு புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அனுமவ்வாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சந்திரப்பா, அவரது உறவினர்கள் கங்கப்பா மற்றும் குத்தேவ்வா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.