காசு தரலைனா பாலியல் புகார்தான்; மிரட்டி வழிப்பறி - சிக்கிய பெண்!
பல மாதங்களாக நூதனமுறையில் வழிப்பறி செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூதன வழிப்பறி
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் மிகவும் முக்கிய பகுதி. இங்கு அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக நைமா சுல்தானா(32) என்ற பெண் தனியாக கார் ஓட்டி வரும் நபர்களை குறிவைத்து உதவி கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிக்கிய பெண்
அதன்படி, காரில் ஏறும் அவர் சிறிது தூரம் சென்றவுடன் தனது ஆடைகளை கிழித்துக்கொண்டு "நீ என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளி விடுவேன்” என்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். மேலும், இவர் அப்பகுதி மட்டுமின்றி ஹைதராபாத்திலும் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஜுப்ளி ஹில்ஸ் வழியாக வந்த காரினை லிப்டு கேட்டு ஏறியுள்ளார். சிறிது தூரம் கார் சென்றதும் தனது சுயரூபத்தை காட்டிய அவரை அறிந்துக்கொண்ட அந்நபர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த போலீசாரிடம் சுல்தானாவை கைது செய்தனர். விசாரணையில், சுல்தானா மீது ஏற்கனவே 17 வழக்குகள் இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.