ஓடும் காரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

Attempted Murder Sexual harassment Child Abuse Uttarakhand
By Sumathi Jun 27, 2022 04:37 PM GMT
Report

உத்தரகாண்டில் பெண் மற்றும் அவரது 6 வயது மகளை ஒரு கும்பல் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காரில் லிப்ட் 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் இரவு, தனது 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சோனு என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

6 year old child

இதை நம்பிய அந்த பெண் தனது மகளுடன் அந்த காரில் ஏறியுள்ளார். காரில் ஏற்கனவே சோனுவின் கூட்டாளிகள் இருந்துள்ளனர். அப்போது, ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரின் 6 வயது மகளையும் காரில் இருந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 6 வயது மகள்

பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணையும், அவரது மகளையும் ஒரு ஏரியின் அருகே இறக்கி விட்டுள்ளனர். பின்னர் அந்தப் பெண் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார்.

ஓடும் காரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்! | Woman 6 Year Old Daughter Gangraped In Moving Car

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

மேலும் இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரமேந்திர தோவல் கூறுகையில், காரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று அந்த பெண் சரியாக கூறவில்லை. காரை ஓட்டியவர் பெயர் சோனு என்று மட்டும் சொன்னார்.

இருவரையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' : 90ஸ் கிட்ஸ் காவியம் சூர்யவம்சம்