ரூபாய் நோட்டில் இருக்கும் சாய்ந்த கோடுகள்; எதற்காக தெரியுமா..? பயனுள்ள தகவல்!

India Indian rupee
By Jiyath May 22, 2024 05:56 AM GMT
Report

ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் இருக்கும் சாய்வான கோடுகளை பற்றிய தகவல். 

ரூபாய் நோட்டு

இந்திய ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் 'ப்ளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப இந்த கோடுகள் கூடுகிறது மற்றும் குறைகிறது.

ரூபாய் நோட்டில் இருக்கும் சாய்ந்த கோடுகள்; எதற்காக தெரியுமா..? பயனுள்ள தகவல்! | Why Banknotes Have Slanted Lines

இந்த கோடுகள் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. இதன் உதவியால் அவர்கள் நோட்டுகளின் மதிப்பை புரிந்து கொள்கின்றனர். பார்வையற்றவர்கள் விரல்களை வைத்து கோடுகளை தேய்த்து பார்ப்பதன் மூலம் நோட்டின் மதிப்பை கண்டுபிடிக்கின்றனர்.

என்னது.. பிரியாணியின் உண்மையான பெயர் பிரியாணி இல்லையா? சுவாரஸ்ய தகவல்!

என்னது.. பிரியாணியின் உண்மையான பெயர் பிரியாணி இல்லையா? சுவாரஸ்ய தகவல்!

எத்தனை கோடுகள்?

இந்த கோடுகள் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான பணத்தில் உள்ளன. மேலும், ஒவ்வொரு நோட்டுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்ப இந்த கோடுகள் அச்சிடப்பட்டிருக்கும்.

ரூபாய் நோட்டில் இருக்கும் சாய்ந்த கோடுகள்; எதற்காக தெரியுமா..? பயனுள்ள தகவல்! | Why Banknotes Have Slanted Lines

100 ரூபாய் நோட்டின் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். 200 ரூபாய் நோட்டில் 4 வரிகள் உள்ளன. ஆனால் அதனுடன் 2 பூஜ்ஜியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 500 ரூபாய் நோட்டில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டில் 7 கோடுகளும் உள்ளன.