பாலியல் வன்கொடுமை..இளைஞரை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து எரித்த ஊர்மக்கள்!

Attempted Murder Sexual harassment Assam
By Sumathi Jul 11, 2022 11:29 AM GMT
Report

நடுத்தர வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருக்கிறார்கள் ஊர்மக்கள்.

பாலியல் வன்கொடுமை

அசாம், போர் லாலுங் கிராமத்தில் சபிதா என்கிற 35 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

sexual harrasment

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணின் படுகொலை அந்த கிராமத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் படுகொலையில் 5 பேரை சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.

கழுத்தை அறுத்து கொலை 

அந்த ஐந்து இளைஞர்களையும் பிடித்து வந்த கிராமத்து பஞ்சாயத்தார் பஞ்சாயத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்தது ஒரு இளைஞர் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.

assam

ரஞ்சித் போர்டோலோய் என்கிற 30 வயது இளைஞர்தான் என்பது தெரியவந்ததால் உடனே அந்த இளைஞரை கட்டி வைத்து எரித்துக் கொல்ல வேண்டும் என்று பஞ்சாயத்தார் உத்தரவிட, அதன்படியே ரஞ்சித்தை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

சர்ச்சை சம்பவம்

பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி இருக்கிறார்கள். இதில் தீ பற்றி அலறி துடித்து இருக்கிறார். சம்பவ இடத்திலேயே எரிந்து கரிக்கட்டையாக ஆகி இருக்கிறார் ரஞ்சித்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பஞ்சாயத்து தலைவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகமெங்கும் கமல்ஹாசன் திடீர் சுற்றுப்பயணம்.. ஏன்?