தாயுடன் தகாத உறவு.. 3வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. வெறிச்செயலால் நடந்த பரிதாபம்!
கள்ளக்காதலியின் மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயுடன் தகாத உறவு
ஈரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(24). இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

திவ்யா செங்கல் சூளை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திவ்யாவுக்கும், அவரைவிட இளையவரான கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஜெகன்(20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவனை பிரிந்த திவ்யா, கள்ளக்காதலன் ஜெகனுடன் கள்ளக்குறிச்சியில் கடந்த ஒரு வருடமாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து வேறு ஊருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்த அவர்கள், மதுரை அய்யூர் வந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது ஜெகனின் நண்பரான பழனியப்பன் அவர்களுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
சதிச்செயல்
இதில், 3 பேரும் ஒரே வீட்டில் தங்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி திவ்யாவின் மூன்றரை வயது மகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதற்கு உடந்தையாக ஜெகனும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை அறிந்த திவ்யா இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் ஜெகன் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தை உடல்நிலை மோசம்
வெளியில் சென்று இருந்த திவ்யா வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரை தனது கணவரிடம் விட்டுவிட்டு வந்துவிடலாம் என முடிவு செய்து திவ்யா, மகள் மற்றும் கள்ளக்காதலன் ஜெகன், அவரது நண்பர் பழனியப்பன் ஆகிய
4 பேரும் பைக்கில் மதுரையில் இருந்து வந்துக்கொண்டிருந்தனர். குழந்தை மிக சோர்வடைந்த நிலையில் இருந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வழக்கு பதிவு
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து, திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், பழனியப்பன் ஆகிய 3 பேரும் பலியான குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக விராலிமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூவரையும் கைது செய்தனர்.
நாட்டின் முதல் திருநம்பி விமானி... விமானம் ஓட்ட தடை! ஏன் இந்த நிலை?
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan