நள்ளிரவில் ரகசிய உறவு.. கதவை தட்டிய கிராம மக்கள் - வசமாக சிக்கிய ஜோடி!
கள்ளக்காதளர்கள் ரகசிய சந்திப்பில் கிராம மக்களிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ள உறவு
ஜார்க்கண்ட் மாநிலம், கிரித் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
அதனால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் அடிக்கடி இரவில் ரகசியமாக உறவில் இருந்து வந்துள்ளனர்.
கிராம மக்கள்
இந்நிலையில் , அந்த இளைஞர் நள்ளிரவில் காதலியை காண சென்றுள்ளார், அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தினர் பார்த்ததும் ஊருக்கே இந்த விஷயம் பரவியது. இதனால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர், அப்பொழுது இருவரும் வசமாக சிக்கினர்.
பின்னர், அந்த இளைஞரை ஊருக்கு நடுவில் இருந்த மரத்தில், கயிற்றால் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர். இதில் அந்த இளைஞருக்கு மண்டை உடைந்து, உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியிருக்கிறது, ஆனால் கடைசிவரை ஊர்க்காரர்கள் போலீசுக்கு போகவில்லை.
மேலும், தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் விசாரித்தனர், பின்னர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர், ஆனால் இருவரின் வீட்டாரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamilzha Tamizha: பெண்களை சங்கடப்பட வைத்த இளைஞரின் செயல்... கடும் கோபத்தில் எச்சரித்த நடுவர் Manithan

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வவுனியா வடக்கு தவிசாளர்: அமர்ந்திருந்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் IBC Tamil
