Monday, Jun 23, 2025

150 முறை அழைத்த கணவர்.. மதிக்காத மனைவி.. ஆத்திரத்தில் காவலர் செய்த காரியம் - கொடூரம்!

Attempted Murder Crime Death
By Vinothini 2 years ago
Report

கணவரின் அழைப்பை ஏற்காததால் மனைவிக்கு நேர்ந்தது அதிர்ச்சியாய் ஏற்படுத்தியுள்ளது.

தகராறு 

கர்நாடகா, கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் 32 வயதான இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் 23 வயதான பிரதீபா என்பவருடன் திருமணம் நடந்தது. கிஷோர் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

husband-murdered-for-not-picking-his-150-calls

இவரது மனைவிக்கு நட்பு வட்டாரம் அதிகம் அதனால் இவர் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பார், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இவர் கர்ப்பமாக இருந்ததால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரது கணவர் இரவு 150 முறை கால் செய்துள்ளார், ஆனால் கால் வெயிட்டிங்கில் இருந்துள்ளது.

அடிக்கடி மசாஜ் சென்டருக்கு.. போலி புல்லட் போலீஸ் செய்த காரியம் - ஆடிப்போன அதிகாரிகள்!

அடிக்கடி மசாஜ் சென்டருக்கு.. போலி புல்லட் போலீஸ் செய்த காரியம் - ஆடிப்போன அதிகாரிகள்!

கொலை

இந்நிலையில், கடுப்பான கணவர் நேரடியாக மாமியார் வீட்டிற்கே சென்று ஒரு ஷாலை எடுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பின்னர் அவரது சட்டையில் மறைத்து வாய்த்த பூச்சி மருந்தை எடுத்து காவலர் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

husband-murdered-for-not-picking-his-150-calls

அக்கம் பக்கத்தினர் மீட்டு சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் சிகிச்சை முடிந்து குணம் அடைந்ததும் விசாரணை அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.