50 வயது, சினிமா பக்கமே வரல - திடீரென டாக்டர் பணியில் இருந்து விலகிய விஜயகுமார் மகள்!

Vijaykumar Tamil Cinema
By Sumathi Apr 18, 2024 09:30 AM GMT
Report

அனிதா விஜயகுமார் டாக்டர் பணியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

anitha vijayakumar

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு அண்மையில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பலர் விரும்பும் ஒரு கனவு வேலையில் நானும் இருந்தேன். ஆனால் இன்று நான் அந்த வேலையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தைரியமான முடிவை எடுத்து வெளியேறி இருக்கிறேன்.

50 வயசு; சினிமா பக்கமே வரல; வீடு இல்லை அது அரண்மனை - மகளுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் மகள்!

50 வயசு; சினிமா பக்கமே வரல; வீடு இல்லை அது அரண்மனை - மகளுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் மகள்!

வைரல் பதிவு

என் வாழ்க்கையில் முதல் பாதியில் நான் கடினமாக உழைப்பேன் என்று சொன்னேன் அதுபோலவே நான் 25 ஆண்டுகள் செய்தேன். நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் வேலை செய்தேன். குடும்பம், வேலை, நண்பர்கள் மற்றும் ஆரோக்கியம் என்று எல்லா விஷயங்களையும் சமநிலைப்படுத்தி இருந்தேன்.

vijayakumar family

நான் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அது ஒரு தைரியமான முடிவு. ஆனால் அந்த முடிவை சில வருடங்களாகவே யோசித்து தான் நான் இப்போது எடுத்து இருக்கிறேன். இனி என்னுடைய கனவுகளை பின்பற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை உறுதி செய்து பல ஆண்டுகளாக இந்த ஓய்வூதியத்திற்கு திட்டமிட்டேன்.

அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் போது இந்த வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். மேலும் நாம் செய்த கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் அனைத்தையும் ஓய்வெடுக்கவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.