விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு - பாஜக எச்.ராஜா சொன்ன வார்த்தை!
நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு எனது வாழ்த்துக்கள் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா
திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.இதில் பாஜக தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார்.அப்போது நடிகர் விஜய் மாநாடு நடத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர்,’’நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு எனது வாழ்த்துக்கள். 18 வயதான அனைவரும் மக்களுக்காகப் போராடவும் அரசியலுக்கு வரவும் உரிமை உள்ளது.
நடிகர் விஜய்
அதனை நடிகர் விஜய் ஏன் மறுக்கப் போகிறோம் என்று கூறினார். விஜய் மாநாட்டில் கொள்கையைக் கூறட்டும் அதன் பின்பு அதைப்பற்றிப் பேசலாம் என்று கூறினார் . அப்போது விஜய் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது குறித்த கேள்விக்கு,
திமுகவுடன் பங்காளி சண்டை அவர்கள் வாக்கினைப் பிரித்துக் கொள்ளப் போகிறார்கள் அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நான் a டீம் மற்றும் b டீம் பற்றிப் பேசுவது இல்லை" என்று கூறினார்.