மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது - வானதி சீனிவாசன்!
சாதிய மோதல்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வானதி சீனிவாசன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிச் சிறார்களிடையே முற்றிய சாதிய வன்முறையானது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சாதியை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது.
இதுதான் சமூக நீதியா?
குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கள்ளங்கபடமில்லாத பள்ளிச் சிறார்களின் மனதில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல் பரவிவரும் சாதிய மோதல்கள்,
உங்கள் நிர்வாகத்திறனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் நீங்கள் மார்தட்டி முழங்கி வரும் சமூக நீதியா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.