கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள் - மீண்டும் சாதிய வன்முறை? நெல்லையில் பரபரப்பு!!

Tamil nadu Tamil Nadu Police Tirunelveli
By Karthick Jul 02, 2024 05:05 AM GMT
Report

பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.

நாங்குநேரி சம்பவம்

சாதிய பாகுபாடுகளின் நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவர் வெட்டப்பட்ட சம்பவம், மாநிலம் கடந்து பல இடங்களில் இருந்தும் கண்டனங்களை பெற்றது.

Nanguneri incident

தற்போது +2 தேர்வில் தேர்வாகியிருக்கும் சின்னத்துரைக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். இன்னும் அந்த சம்பவத்தின் வடுவே குறையாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவர்கள் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மீண்டும் ஒரு சம்பவம்

இது தொடர்பாக வெளியான செய்திகளின் படி, நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியின் அரசு பள்ளியில் மாணவர்களிடம் சாதி ரீதியிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில் 2 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

again caste fight in thirunelveli school

உண்மையில் சாதி ரீதியிலான சண்டையில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதா? தொடர்ந்து சாதிய வன்முறைகள் மாணவர்களிடம் தொடர என்ன காரணம் என்பதெல்லாம் விசாரணையில் தான் தெரியவரும்.