வைகாசி விசாகம்: திருமண, குழந்தை வரம் வேண்டுறீங்களா? இதை கண்டிப்பா மறக்காதீங்க
முருகனின் அருளை பெற எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி விசாகம்
முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகி, துன்பம் நீங்கும் என்பது நம்பிக்கை.
மேலும், விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
விரத முறை
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான 'ஓம் சரவணபவ', 'ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும் என்பது குறிப்பிடத்தக்கது.