தோனி கேப்டனா ஆகிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? கொதித்த சிஎஸ்கே வீரர்
தோனியை கேப்டனாக மாற்றினால் எல்லாம் சரியாகிவிடாது என உத்தப்பா கூறியுள்ளார்.
கேப்டன் தோனி
2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் என அறிவிக்கப்பட்டது.
தற்போது 2025ல் 5 போட்டிகளில் வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த சிஎஸ்கே அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேறினார். புதிய கேப்டனாக தோனி அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் உத்தப்பா,
உத்தப்பா விமர்சனம்
“எம் எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பது அணியின் போக்கை தானாகவே மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் உள்ள நிறைய பிரச்சனைகளை எப்படி சரி செய்வீர்கள்? ருத்துராஜ் போன்ற ஒரு முன்னணி பேட்ஸ்மேன் தற்போது வெளியேறி இருப்பது அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த போட்டியில் ரன்களை அடித்து கான்வே ஓரளவு நம்பிக்கை கொடுத்துள்ளார். ஆனால் ரச்சின் ரவீந்திரா முதல் போட்டிக்கு பிறகு தடுமாறிவருகிறார்.
ருதுராஜ்க்கு பதிலாக நீங்கள் சாம் கரனை கொண்டுவருவீர்களா? அல்லது ராகுல் திரிப்பாத்தியை நம்பர் 3-ல் விளையாட வைப்பீர்களா? அல்லது வேறுயாராவது வருவார்களா? இவ்வளவு குழப்பங்களை கடந்து எப்படி சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கப்போகிறது என்பது புரியவில்லை.
அடுத்த போட்டியில் இந்த பிரச்னைகளை எப்படி சிஎஸ்கே சரிசெய்யப்போகிறது என்பதை பார்த்தபிறகே தெளிவுபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.