காரில் விழுந்த லேசான கீறல்..பெற்றோரின் கண்முன்னே மகனை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்!

Viral Video Maharashtra Crime
By Vidhya Senthil Oct 15, 2024 08:05 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

மும்பையில் பெற்றோரின் கண்முன்னே மகனை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாலத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் வயது(28 ). இவர் தசரா பண்டிகையை முன்னிட்டு புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி உள்ளார். அதில் தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.

maharashtra

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர்டேக் செய்ய முயன்று லேசாக மோதியதாக தெரிகிறது. இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆட்டோ ஓட்டுநரின் சத்தத்தைக் கேட்டு சகா ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.

வேறு பெண்ணுடன் உல்லாசம்..விவாகரத்து கேட்ட மனைவி - கணவர் செய்த கொடூரம்!

வேறு பெண்ணுடன் உல்லாசம்..விவாகரத்து கேட்ட மனைவி - கணவர் செய்த கொடூரம்!

ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தை முற்றவே சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகாஷஷை சரமாரியாகத் தாக்கினர். அப்போது ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளது.இதனைத் தடுக்க முயன்ற ஆகாஷின் தந்தையும் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

கொல்லப்பட்ட சம்பவம்

தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே படுத்துக்கொண்டார் . ஆனாலும் அந்த கும்பல் அடி உதையை நிறுத்தவில்லை.கடைசியாக ஆகாஷை உயிர்போகும் அளவுக்கு அடித்த பின்னரே அந்த கும்பல் விட்டுச் சென்றது.

viral video

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.ஆகாஷ் மீது நடந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அக்டோபர் 12 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து 9 குற்றவாளிகளைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் அக்டோபர் 22-ம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது