வேறு பெண்ணுடன் உல்லாசம்..விவாகரத்து கேட்ட மனைவி - கணவர் செய்த கொடூரம்!
விவாகரத்து கேட்ட மனைவியின் மீது கணவர் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி - கணவர்
கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
அதனை அறிந்த அப்பெண் கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்தார். அதுமட்டுமில்லாமல், கணவர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அப்பெண் கண்டுபிடித்தாள்.
விவாகரத்து
இதனால் பணமுடைந்த அப்பெண் கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதையடுத்து, அப்பெண் தாய் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் அங்கு வந்த அந்த நபர் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார்.
இதில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
