பயங்கர வெயில் சுட்டெரிப்பு - தமிழ்நாடு வெதர்மேன் பகீர் எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Kanyakumari
By Sumathi Mar 30, 2024 05:30 AM GMT
Report

மலைகள் இடிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

மலை வெடிப்பு

கன்னியாகுமரி, பத்துகாணி அருகேயுள்ள கிளாமலை பகுதியில் பயங்கர வெயில் சுட்டெரித்தது. அப்போது அங்குள்ள மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி திடீரென வெடித்து சிதறியது.

பயங்கர வெயில் சுட்டெரிப்பு - தமிழ்நாடு வெதர்மேன் பகீர் எச்சரிக்கை! | Tn Weatherman About Cracks Western Ghats Kumari

இதில் பாறைகள் சிதறி புகை மண்டலமாக காட்சியளித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மலைப்பகுதியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஒவ்வொரு மலையும் மழைக்கு மிகவும் முக்கியமானது. மலைகள் காற்றை உயர்த்துகின்றன. நாம் அனைவரும் நல்ல சாலைகளில் வாகனங்களை இயக்க விரும்புகிறோம். ஆனால் வேறு மாற்று இருக்க முடியாதா?

பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை!

பனிதான் வருது மழை இல்லனு நம்ப வேண்டாம் - வெதர்மேன் எச்சரிக்கை!

பிரதீப் எச்சரிக்கை

குவாரிகளுக்காக மலைகள் இடிக்கப்படுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இதனால் மழை பொழிவு குறையும் என எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் எதையும் மீண்டும் உருவாக்க முடியும், ஆனால் ஒரு மலையை மீண்டும் உருவாக்க முடியாது. ஒருமுறை இழந்தால், அது என்றென்றும் இழந்ததுதான் என வேதனை தெரிவித்துள்ளார்.

pradeep post

இப்பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். அதன் பிறகே மலை வெடிப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.