பல் சிகிச்சையில் தொற்று; 8 பேர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி
அரியவகை பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல் சிகிச்சை
திருப்பத்தூர், வாணியம்பாடியில் பல் கிளினிக்கில் ஏற்பட்ட அரியவகை பாக்டீரியா தொற்று காரணமாக 2023ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வில் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.
பெரியோஸ்டீல் எலிவேட்டர் எனப்படும் அறுவை சிகிச்சை கருவி மூலம் Saline பாட்டிலை திறந்து மூடி பயன்படுத்தியதாகவும்,
8 பேர் பலி
இதன் மூலம் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 10 பேருக்கு மூளையில் ஏற்படும் நியூரோ மெலியாய்டோசிஸ் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பாக்டீரியா இரத்தத்திற்கு பதிலாக நேரடியாக நரம்பு பாதையில் பயணித்து உடனடி இறப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும், காய்ச்சல், தலைவலி, பார்வைக் குறைபாடு உள்ளிட்டவை இந்த தொற்று பாதிக்கப்பட்டதன் அறிகுறிகளாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.