பல் சிகிச்சையில் தொற்று; 8 பேர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி

Death Tirupathur
By Sumathi May 30, 2025 06:09 AM GMT
Report

அரியவகை பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல் சிகிச்சை

திருப்பத்தூர், வாணியம்பாடியில் பல் கிளினிக்கில் ஏற்பட்ட அரியவகை பாக்டீரியா தொற்று காரணமாக 2023ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல் சிகிச்சையில் தொற்று; 8 பேர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Tirupathur Eight Died For Teeth Treatment

இதுதொடர்பான ஆய்வில் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.

பெரியோஸ்டீல் எலிவேட்டர் எனப்படும் அறுவை சிகிச்சை கருவி மூலம் Saline பாட்டிலை திறந்து மூடி பயன்படுத்தியதாகவும்,

உதட்டுக்கு பதில் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பில் ஆபரேஷன் - கொதித்த உறவினர்கள்

உதட்டுக்கு பதில் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பில் ஆபரேஷன் - கொதித்த உறவினர்கள்

8 பேர் பலி

இதன் மூலம் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 10 பேருக்கு மூளையில் ஏற்படும் நியூரோ மெலியாய்டோசிஸ் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் சிகிச்சையில் தொற்று; 8 பேர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Tirupathur Eight Died For Teeth Treatment

இந்த வகை பாக்டீரியா இரத்தத்திற்கு பதிலாக நேரடியாக நரம்பு பாதையில் பயணித்து உடனடி இறப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும், காய்ச்சல், தலைவலி, பார்வைக் குறைபாடு உள்ளிட்டவை இந்த தொற்று பாதிக்கப்பட்டதன் அறிகுறிகளாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.