ஆஃபர்...ஆஃபர்..லுலு மாலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஓட்டம் பிடித்த ஊழியர்கள்..!

Kerala
By Thahir Jul 09, 2022 12:30 AM GMT
Report

திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள லுலு மாலில் நள்ளிரவில் ஆஃபர் அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் கடைகளை அடைத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள லுலு மாலில் நள்ளிரவில் ஆஃபர் அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

Lu Lu

கேரளாவில் அண்மை நாட்களாக கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்துள்ளது.இதையடுத்து அம்மாநிலத்தில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஓட்டம் பிடித்த ஊழியர்கள் 

இந்த நிலையில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள லுலு மாலில் நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை எந்த பொருள் வாங்கினாலும் 50 சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து லுலு மாலில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.இதனால் லுலு மால் நிரம்பி வழிந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் கடை ஊழியர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை இதனால் ஊழியர்கள் கடைகளின் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடினார். லுாலுா மாலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.