தடுத்த மனைவி.. சரமாரியாக தாக்கிய கணவன்! பின்னணி என்ன?

Tamil nadu Attempted Murder
By Sumathi Jul 07, 2022 07:39 AM GMT
Report

குழந்தைகளை பார்க்க சென்ற கணவரை பார்க்கவிடாமல் தடுத்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் பழனி முருகன் (39) , அதே பகுதியில் சந்தை தெருவில் வசித்து வரும் பவித்ரா (27) என்பவரை கடந்த 2011 வருடம் திருமணம் செய்து

theni

4 வயதில் ஆண் குழந்தையும் 9 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக

தகராறு

இருவரும் பிரிந்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் அவரவரது வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் தாய் பவித்ராவிடம் வசித்து வந்தனர்.

தடுத்த மனைவி.. சரமாரியாக தாக்கிய கணவன்! பின்னணி என்ன? | Theni Husband Arrested After Slashing Wife

இந்த நிலையில் பழனி முருகன் தனது குழந்தைகளை பார்க்க இன்று மனைவி பவித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது குழந்தைகளை பார்க்க விடாமல் பவித்ரா தகராறு செய்ததாக தெரிகிறது.

அரிவாளால்  வெட்டு

இந்த நிலையில் தான் சொந்தமாக வைத்துள்ள துணி கடைக்கு பவித்திரா சென்றுள்ளார். அங்கு சென்றும் பழனி முருகன் தகராறு செய்துள்ளார். அங்கு தகராறு முற்றிய நிலையில் பழனி முருகன் கையில் மறைத்து வைத்திருந்த

அரிவாளால் மனைவியின் இரு கைகளையும் வெட்டி மேலும் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து

பரபரப் பு சம்பவம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பவித்ரா சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .மனைவியை தாக்கிய கணவர் பழனி முருகன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.     

வைரலாகும் விஜய்யின் மச்சினிச்சி புகைப்படம் - ரசிகர்கள் ஆர்வம்!