பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சமையல்காரர்

murder knife kill
By Jon Jan 13, 2021 12:09 PM GMT
Report

காஞ்சிபுரம் அருகே சமையல்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்து களக்காட்டூர் காந்தி சாலையை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி. சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு களக்காட்டூர் பகுதியில் நின்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரித்து வருகின்றனர்.