மருமகள், பேரக்குழந்தை மீது தீ வைத்த நபர் - தேனி அருகே பரபரப்பு சம்பவம்

Attempted Murder
By Petchi Avudaiappan May 18, 2022 05:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கம்பம் அருகே வரதட்சணை கேட்டு மருமகள் மற்றும் கைக்குழந்தை மீது தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன் – சுகப்பிரியா தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் சுகப்பிரியாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

மருமகள், பேரக்குழந்தை மீது தீ வைத்த நபர் - தேனி அருகே பரபரப்பு சம்பவம் | Father In Law Setting Fire On Daughter In Law

அந்த வகையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த பெரியகருப்பன் மீண்டும் வரதட்சணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் மருமகள் மற்றும் பேரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் இருவரும் அலறி துடித்தனர். 

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் குழந்தை உயிரிழந்த நிலையில் சுகப்பிரியா தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியகருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.