ஐபிஎல் நல்லா இருக்கனுமா? ஆர்சிபியை யாருக்காவது வித்துருங்க - முன்னாள் வீரர் கொந்தளிப்பு!
முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, ஆர்சிபி அணி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி பந்து வீச்சில் 287 ரன்கள் விட்டுக் கொடுத்து தோல்வியை தழுவியது.
தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டென்னிஸ் முன்னாள் வீரர் மகேஷ் பூபதி, ஐபிஎல் தொடர் நன்றாக இருக்க வேண்டும். கிரிக்கெட் நன்றாக இருக்க வேண்டும், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் என
மகேஷ் பூபதி கொதிப்பு
பிசிசிஐ நினைத்தால் தயவு செய்து ஆர்சிபி அணியை வேறு ஒரு புதிய உரிமையாளருக்கு விற்று விட நடவடிக்கை எடுங்கள். ஏனென்றால் தற்போது இருக்கும் அணி நிர்வாகம் ஆர்சிபிஐ பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை.
மற்ற அணிகள் எவ்வளவோ மாறுதலை செய்திருக்கிறது. ஆனால் ஆர்சிபி மிகவும் மோசமான முறையில் அணியை கட்டமைத்து இருக்கிறது என தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.