சேப்பாக்கத்தில் பிட்ச் ரிப்போர்ட்; கலங்கும் ஆர்சிபி - அது மட்டும் மறுபடி நடந்தால் அவ்வளவுதான்!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல் 2024
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோத உள்ளன.
இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி 2008இல் மட்டும் ஒரே ஒரு வெற்றியை பெற்றது.
இதுவரை 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, 2024 ஐபிஎல் தொடரிலாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களமிறங்கவுள்ளது. ஆனால், சேப்பாக்கம் மைதானம் என்றாலே கதி கலங்க வைக்கும் நினைவாக மாறிவிட்ட ஆர்சிபிக்கும் இது கண்டம் தான்.
csk vs rcb
இந்நிலையில், அந்த அணியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், சேப்பாக்கம் பிட்ச் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது.
மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும். ஸ்பின் மற்றும் பவுன்ஸ் என இரண்டு வகையான பந்துகளையும் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த இயலும். இருப்பினும், இரண்டாவது பாதியில் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திரும்பலாம்.
இதன்மூலம், இந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை நிச்சயம் பார்க்க முடியும். எனவே, ரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.