கடைசி சீசன் இது தான் - மறைமுகமாக Confirm பண்ண தல தோனி...!!
இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல்
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் இன்று துவங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் போட்டியில் பலம் வாய்ந்த பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
தொடரை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தல தோனி. சென்னை அணிக்கு அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் நேற்று அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும் சூழலில், மற்றொரு உள்ளர்த்தமும் இதில் உள்ளது என சமூகவலைத்தளங்களில் பலரும் பேசத்துவங்கி விட்டனர்.
ஓய்வு...?
அதாவது, தோனி விரைவில் ஐபிஎல் தொடரில் இருந்து பெறவுள்ளார் என்று நீண்டகாலமாகவே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், ஒவ்வொரு முறையும் தோனி "definitely not" என கூறி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆனால், கேப்டன் மாற்றப்படவில்லை. இம்முறை கேப்டன் மாற்றப்பட்டு அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுகிறார் என்பது மறைமுகமாக உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் வருத்தத்துடன் பேசி வருகிறார்கள்.