தோனி இல்லையா - CSK கேப்டனாகினார் ருதுராஜ் கெய்க்வாட் - அதிர்ந்த CSK ரசிகர்கள்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அணி
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த முறை கோப்பையை வென்ற உத்வேகத்தில் சென்னை அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு யார் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்து வந்தது. நடுவில் ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட நிலையில், அந்த முடிவு பாதியிலேயே மாற்றப்பட்டு மீண்டும் கேப்டனாகினார் தோனி.
இந்த ஆண்டு நிச்சயமாக கேப்டன் மாற்றப்படுவார் என்ற பேச்சுக்கள் அதிகளவில் எழுந்தது.
ருதுராஜ்
அதனை உறுதி செய்யும் வகையில் இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது சென்னை அணி. IPL கோப்பை அறிமுக நிகழ்வில் அனைத்து அணியின் கேப்டன்களும் பங்கேற்றனர்.
அப்போது சென்னை அணியின் தரப்பில் இளம் ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் வந்திருந்தார். கேப்ஷனில் presenting the 9 captain's என பதிவிட்டு சென்னை அணிக்கு இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
𝐈𝐭'𝐬 𝐒𝐡𝐨𝐰𝐓𝐢𝐦𝐞!
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
The #TATAIPL is here and WE are ready to ROCK & ROLL 🎉🥳🥁
Presenting the 9 captains with PBKS being represented by vice-captain Jitesh Sharma. pic.twitter.com/v3fyo95cWI
சென்னை அணி ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.