26 வயசுதான்; கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆர்சிபி வீரர் - அதிர்ச்சி காரணம்?
ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஹசரங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக அறியப்படுபவர் வனிந்து ஹசரங்கா. டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஹசரங்கா விளையாடி இருந்தாலும், ஓய்வுக்கு காரணமாக இனி அதிகமாக பிரான்சைஸ் கிரிக்கெட்டை விளையாட போகிறேன் என்று கூறியுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
அண்மையில் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தவர், கடைசி நேரத்தில் மேஜர் லீக் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார்.
முன்னதாக திசாரா பெரேரா இதேபோல் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓய்வை அறிவித்த போது, அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போது, அவரது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனாலும் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார் என இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.