5 ஆண்டுகளில் கணவரை போல் யாரும் இப்படி செய்திருக்க முடியாது - ஆசிரியை தற்கொலை

Delhi Crime Death
By Sumathi Mar 19, 2025 02:30 PM GMT
Report

ஆசிரியை ஒருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் 

டெல்லி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா(29). இவர் 2019ல் கௌரவ் கௌசிக் என்வரை திருமணம் செய்துக்கொண்டார். கெளசிக் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

அன்விதா சர்மா

இந்நிலையில், சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்' என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ”அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை விரும்பினர். ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள்.

4 நாட்கள் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சீரழித்த சிறுவர்கள் - அதிர்ச்சி பின்னணி!

4 நாட்கள் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சீரழித்த சிறுவர்கள் - அதிர்ச்சி பின்னணி!

ஆசிரியை தற்கொலை  

கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் செய்தது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது. நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் பணிப்பெண்ணை மட்டுமே விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன்.

5 ஆண்டுகளில் கணவரை போல் யாரும் இப்படி செய்திருக்க முடியாது - ஆசிரியை தற்கொலை | Teacher Commits Suicide For Husband Delhi

அவமானங்களை இனியும் தாங்க முடியாது. என் கணவரால் எனது வங்கிக் கணக்குகள், காசோலை புத்தகம் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். உடனே, மகளின் இறப்பு தொடர்பாக அவரது தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்.