தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல் - எப்போது தெரியுமா?

Tamil nadu TASMAC Lok Sabha Election 2024
By Sumathi Apr 09, 2024 04:54 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

tasmac

இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

இனி MRP விலையில் டாஸ்மாக் மதுபானங்கள் : அமைச்சர் அதிரடி உத்தரவு

இனி MRP விலையில் டாஸ்மாக் மதுபானங்கள் : அமைச்சர் அதிரடி உத்தரவு

4 நாட்கள் விடுமுறை

அதன்படி, வாக்குப்பதிவை ஒட்டி, வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள், பார்கள் மூடப்படுகிறது. அதன்பின், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

இதற்கிடையில், குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.