இன்ஸ்டாவில் பல பேருடன் பேச்சு; கணவன்-மனைவி இடையே தகராறு - இறுதியில் சோகம்!

Tamil nadu Death Salem
By Jiyath Jun 07, 2024 06:35 AM GMT
Report

திருமணமான 3 ஆண்டுகளில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம் 

சேலம் மாவட்டம் அய்யம் பெருமாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்துரு (25) என்பவர் புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாவில் பல பேருடன் பேச்சு; கணவன்-மனைவி இடையே தகராறு - இறுதியில் சோகம்! | Talking To Many Women On Instagram Wife Suicide

இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்துரு பல பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி ஜீவா கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்!

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்!

மனைவி தற்கொலை 

இதனிடையே கடந்த 4-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை அடுத்து, ஜீவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டாவில் பல பேருடன் பேச்சு; கணவன்-மனைவி இடையே தகராறு - இறுதியில் சோகம்! | Talking To Many Women On Instagram Wife Suicide

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.