காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்!

Tamil nadu Crime Death Viluppuram
By Jiyath Jun 06, 2024 12:48 PM GMT
Report

உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார் (28). இவரும், வேலூர் மாவட்டம் கலந்தமேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (20) என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் காதலித்து திருணம் செய்துகொண்டனர்.

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்! | Husband Beats His Wife To Death With An Iron Rod 1

சுகுமாருக்கு திருமணத்திற்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கவலையுடன் இருந்த திவ்யா தனது கணவருக்கு அறிவுரை கூறி வந்துள்ளார். ஆனாலும், தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை சுகுமார் வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுகுமார் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வாலிபர் செய்த காரியம்; ஆசை வார்த்தை கூறி அழைத்த 3 பெண்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

வாலிபர் செய்த காரியம்; ஆசை வார்த்தை கூறி அழைத்த 3 பெண்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

மனைவி கொலை 

பின்னர், தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுகுமார் மதுபோதையில் இருந்ததால் அதற்கு மறுப்பு தெரிவித்த திவ்யா, அவரை தன் அருகில் நெருங்க விடாமல் தள்ளி விட்டுள்ளார்.

காதல் திருமணம்.. உல்லாசத்துக்கு மறுத்த புதுப்பெண் - கணவன் செய்த வெறிச்செயல்! | Husband Beats His Wife To Death With An Iron Rod 1

இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் இரும்புக் கம்பியால் தனது மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த செஞ்சி போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி சுகுமாரை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.