சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது!

Tamil nadu Chennai Crime Death
By Jiyath Feb 25, 2024 06:51 AM GMT
Report

சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காதல் திருமணம் 

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன்(26) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது! | Chennai Pallikaranai Youth Honour Killing

இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று பிரவீனை கத்தியால் சரமாரியாக கொலை செய்துள்ளனர்.

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

ஆணவக்கொலை 

இதனையடுத்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தினேஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது! | Chennai Pallikaranai Youth Honour Killing

இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ், ஸ்டீபன், ஸ்ரீ, விஷ்ணு, ஜோதி லிங்கம் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.