ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த பெண் - ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்த கணவர்

Kerala Accident Death
By Thahir Feb 19, 2023 07:57 AM GMT
Report

கேரளாவில் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிக்கு நிகழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தால் வீல் சேரில் முடங்கிய பிரணவ் 

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்ணிக்கரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இவர் சேரில் முடங்கினார்.

வாழ்க்கை வீல் சேரில் முடக்கப்பட்டதற்கு பின்பும் தான் அனுபவித்து வரும் கஷ்டங்கள் குறித்து கேரளா போக்குவரத்து துறையினர் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அனுபவத்தை எடுத்துக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்துள்ளார்.

முகநுாலில் மலர்ந்த காதல் 

இதனிடையே திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா என்ற பெண்ணுடன் இவருக்கு முகநுால் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

youth-died-after-vomiting-blood-in-kerala

இவர் குறித்து எல்லாம் தெரிந்த அந்த பெண் இவர் மீது ஆசை கொண்டுள்ளார். தன் நிலையை எடுத்துக் கூறி அந்த பெண்ணை விட்டு விலக முயன்றார்.

ஏற்க மறுத்த அந்த பெண் தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பிரணவை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி இருவரும் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் தங்கள் காதல் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு 

இதையடுத்து இருவரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜோடியாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பிரணவ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

பின்பு அவர் சிகிச்சைக்காக மருத்துமனையிலும் அனுமதித்துள்ளனர். ஆனார் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரணவ் உயிரிழந்த சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.