வாலிபர் செய்த காரியம்; ஆசை வார்த்தை கூறி அழைத்த 3 பெண்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Tamil nadu Kanchipuram Crime
By Jiyath May 27, 2024 06:35 AM GMT
Report

3 பெண்களின் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

செல்போன் திருட்டு   

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை கிராமத்தில் 3 பெண்கள் புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்கள் இரவில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

வாலிபர் செய்த காரியம்; ஆசை வார்த்தை கூறி அழைத்த 3 பெண்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்! | Girls Called The Boy Words Of Desire

இதனை நோட்டமிட்ட சுதாகர் என்ற நபர் அந்த பெண்கள் இரவு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடு போன தங்களது செல்போனுக்கு வேறொரு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சுதாகரிடம் பேசினர். அப்போது அந்த பெண்களிடம் தனது வலையில் வீழ்த்துவது போல் அவர் கொஞ்சி கொஞ்சி பேசத் தொடங்கினார்.

தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்; கற்களால் விரட்டி விரட்டி அடித்த கிராம மக்கள் - என்ன நடந்தது?

தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்; கற்களால் விரட்டி விரட்டி அடித்த கிராம மக்கள் - என்ன நடந்தது?

வாலிபர் கைது 

இதனால் சுதாகரின் ஆசை வழியிலேயே சென்று அவரை மடக்கிப்பிடிக்க பெண்கள் திட்டமிட்டனர். பின்னர் சுதாகர் பேசுவதற்கு ஏற்ப நைசாக பேசி, அவரது ஆசைக்கு இறங்குவதாக கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தனர்.

வாலிபர் செய்த காரியம்; ஆசை வார்த்தை கூறி அழைத்த 3 பெண்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்! | Girls Called The Boy Words Of Desire

இதனையடுத்து அந்த பெண்கள் சொன்ன இடத்திற்கு சுதாகர் வந்ததும், அங்கு மறைந்திருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாலாஜாபாத் போலீசார் படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மீது ஆபாசமாக பேசுதல், திருட்டு, மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.