மோசமான செயல்; பயிற்சி செய்ய மறுத்த இந்திய வீரர்கள் - நடந்தது என்ன?
இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி வீரர்கள்
டி20 உலகக் கோப்பை 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில், ஒருநாள் விட்டு ஒருநாள் வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருவது தங்கள் உடற்தகுதியை பாதிக்கலாம் என எண்ணுகின்றனர். இதற்கு காரணம் மோசமான உலகக் கோப்பை அட்டவணை தான் என கூறப்படுகிறது.
அட்டவணை
தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க செயின்ட் லூசியா நகருக்கு இந்திய அணி செல்லவுள்ளது. இதற்காக 357 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருப்பதால் இந்திய வீரர்கள் பயிற்சியை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு பின் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் கயானாவில் நடைபெறும் 2வது அரை இறுதிக்கு செல்ல வேண்டும். எனவே 1030 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.