பாண்ட்யாவும் இல்ல.. பும்ராவும் இல்ல.. இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் - ரெய்னா!
இந்திய அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பு குறித்து ரெய்னா பேசியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா
ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஆகியோர் இந்திய அணியை தீவிரமாக வலுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்தே டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் எனத் தெரியவருகிறது.
அடுத்த கேப்டன்?
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சுப்மன் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார்.
தற்போது 23 வயதான அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்ததாக நீண்ட ஒரு கேப்டன் பயணத்திற்கான தேர்வாக அவர் சரியாக இருப்பார் என்பதால் அவரே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பிற்கான போட்டியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.