போட்டியின் நடுவில் அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்- viral video !
போட்டியின் இடையில் சுப்மன் கில் ரசிகை ஒருவரை திரையில் பார்த்து வாயை பிளந்ததாகக் கூறி ஒரு வீடியோ பரவி வருகிறது.
அழகான பெண்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய அணி மொத்தமாக 89 ரன்கள் மட்டுமே குவித்தது.
அணியின் கேப்டனான சுப்மன் கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு அமர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை அவர் பார்த்து கொண்டு இருந்தார்.அப்போது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வெளிநாட்டு ரசிகையை மீண்டும், மீண்டும் கேமரா மேன் காட்டினார்.
அப்போது சுப்மன் கில் திரையைப் பார்த்து வாயை பிளந்து சிரிப்பது போன்ற காட்சிகளும் அடுத்து திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோவை மட்டும் எடுத்து சில ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது, அந்த பதிவின் கீழ் பலரும் வேடிக்கையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
வாயை பிளந்த கில்
சிலர் ஜிடி அணி படு மோசமாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் போட்டியை பார்ப்பதை விட அந்த ரசிகையை பார்க்கலாம் என சுப்மன் கில் முடிவு செய்து விட்டார் என அந்த அணியை ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.
மேலும் ஒரு சிலர் சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக சொல்லப்படுகின்ற நிலையில், இந்த காட்சியை சாரா பார்த்து விட்டால் இருவருக்கும் பிரேக் அப் ஆகி விடும் என்று கேலி செய்தும் வருகின்றனர்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் போட்டியின் நடுவில் ரசிகர்களின் reaction-ஐ காண்பிப்பது வழக்கம் அப்படியாக ஒரு சில போட்டிகளில் வேகமாக விக்கெட்டுகள் சரிந்து சுவாரசியமின்றி இருக்கும் போது இது போல அழகான ரசிகைகளை திரையில் காட்டி ஒரு வித பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் இதுபோன்று திரையில் தோன்றும் ரசிகைகளை இளம் ரசிகர்கள் அந்த பெண்கள் யார் என்று தேடத் துவங்குவதும் வழக்கமாக உள்ளது.