புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்!

Chennai Crime
By Sumathi Mar 14, 2024 04:37 AM GMT
Report

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை 

சென்னை, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன்(55). இவர் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவரிடம் தோளில் கையை போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்! | Sub Inspector Sexually Harassed Woman Chennai

மேலும், இதுகுறித்து அந்த பெண் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவை அளித்தார். அதன் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆசிரமத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் - பெண் கதறல்!

ஆசிரமத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் - பெண் கதறல்!

சப்-இன்ஸ்பெக்டர் கைது

தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்! | Sub Inspector Sexually Harassed Woman Chennai

அதன்பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.