ரூ.2000 காணவில்லை.. ஆடைகளை களைந்து சோதனை - மாணவி அவமானத்தால் தற்கொலை!

Karnataka Death
By Sumathi Mar 19, 2024 05:42 AM GMT
Report

மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்ததில் தற்கொலை செய்துள்ளார்.

2 ஆயிரம் மாயம்

கர்நாடகா, பாகல்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அவரது பையில் இருந்து ரூ.2 ஆயிரம் பணம் காணாமல் போகியுள்ளது.

karnataka

இதுகுறித்து அதே பள்ளியில் படித்த 8ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியை கேட்டதற்கு அவர் இல்லை என மறுத்துள்ளார்.

தேர்வில் காப்பி..ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர் - அவமானத்தால் மாணவி தீக்குளிப்பு

தேர்வில் காப்பி..ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர் - அவமானத்தால் மாணவி தீக்குளிப்பு

மாணவி தற்கொலை

இந்நிலையில் அதனை நம்பாத ஆசிரியை, மாணவியின் ஆடைகளை சக மாணவிகளைக் கொண்டு களைந்து சோதனையிட்டுள்ளார்.

ரூ.2000 காணவில்லை.. ஆடைகளை களைந்து சோதனை - மாணவி அவமானத்தால் தற்கொலை! | Student Accused Rs 2 000 By Teacher Dies

இதனால் மிகவும் மனம் உடைந்து வீடு திரும்பிய மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.