நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு - சிக்கிய வேலைக்கார பெண்!

Tamil Cinema Chennai Crime
By Sumathi Oct 16, 2024 06:31 AM GMT
Report

நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகையை திருடியதற்காக அவரது வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கருணாகரன்

சென்னை, காரப்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகர் கருணாகரன் (45). இவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44). இவர்கள் வீட்டில் 59.7 சவரன் நகை சிறிது சிறிதாக மாயமாகியுள்ளது.

karunakaran

வீட்டின் பணியாளர்களிடம் விசாரித்ததில் யாரிடமும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கருணாகரன் புகார் அளித்துள்ளார்.

அவர் Pressure-ல அப்படி பண்ணிட்டாரு; இப்போ கேட்டா அந்தமாரி.. - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

அவர் Pressure-ல அப்படி பண்ணிட்டாரு; இப்போ கேட்டா அந்தமாரி.. - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

நகை திருட்டு

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகையும் பதிவு செய்து ஆய்வு செய்துள்ளனர். அதில், கருணாகரன் வீட்டில் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா என்ற விஜிலா மேரி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

chennai police station

சோதனையில் அவரது கை ரேகை ஒத்துப்போகியுள்ளது. இதனையடுத்த, தீவிர விசாரணையில் சிறுகச் சிறுக நகைகளைத் திருடியதை விஜிலா ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து, திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.